April 30, 2024

அந்த ஒரு விஷயத்தால் தான் கேப்டன் இப்படி ஆகிவிட்டார் ..!! உண்மையை சொல்லிய பிரேமலதா ..!! நல்லவர்களுக்கு காலமே இல்லை..!!

நல்லவர்களுக்கு காலமே இல்லை என்று சொல்வது போல ஆகிவிட்டது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நிலைமை . அப்படி ஒரு காலகட்டத்தில் தன்னால் முடிந்த உதவிகளை சக சினிமா கலைஞர்களுக்கும்,  மக்களுக்கும் செய்து வந்தார் விஜயகாந்த்.  இப்படிப்பட்ட ஒரு நடிகர் இன்று எந்திரிச்சு நடக்கக்கூட முடியாத அளவிற்கு இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தற்போது தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா பொறுப்பேற்று இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது , 2011 ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பல துரோகங்கள் , சறுக்கல்களை  கேப்டன் சந்தித்தார்.

அதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் அவருக்கு உடல்நிலை இப்படி ஆகிவிட்டது . அதோடு விஜயகாந்தின் உத்தரவின் படி தான் நான் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பெற்றேன் . இது அவசர முடிவு கிடையாது என்று கூறியிருந்தார் பிரேமலதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *