May 1, 2024

பூனை, நாய் வளர்த்தும் இந்த கால நடிகைகள் ..!! அப்பவே சிறுத்தையை வீட்டிலேயே வளர்த்திய நடிகை ..!! இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

பொதுவாகவே நடிகைகள் நாய் , பூனை போன்றவற்றை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் ஒரு சில நடிகைகள் நாய் இல்லாமல் வெளியில் கூட வரமாட்டார்கள் .  ஆனால் அந்த காலத்திலேயே சிறுத்தையை வளர்த்திருக்கிறார்  ஒரு நடிகை.  அவர் வேறு யாருமில்லை நடிகை சாவித்திரி தான் . கடந்த 1951 ஆம் ஆண்டு வெளியான ,

பாதாள பைரவி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சாவித்திரி . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் தான் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சாவித்திரி.  குறிப்பாக அப்போது பல முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து ஒரு லேடி சூப்பர் ஸ்டார் போல இருந்து வந்தார் நடிகை சாவித்திரி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம்,

கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக் கொண்டு வந்த சாவித்திரி கடந்த 1981 ஆம் ஆண்டு இறந்து விட்டார் . ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு வீட்டிலேயே ,

சிறுத்தையை வளர்த்தி அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்திருக்கிறார் நடிகை சாவித்திரி . அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *