பொதுவாகவே நடிகைகள் நாய் , பூனை போன்றவற்றை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதிலும் ஒரு சில நடிகைகள் நாய் இல்லாமல் வெளியில் கூட வரமாட்டார்கள் . ஆனால் அந்த காலத்திலேயே சிறுத்தையை வளர்த்திருக்கிறார் ஒரு நடிகை. அவர் வேறு யாருமில்லை நடிகை சாவித்திரி தான் . கடந்த 1951 ஆம் ஆண்டு வெளியான ,
பாதாள பைரவி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சாவித்திரி . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் தான் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ,
தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை சாவித்திரி. குறிப்பாக அப்போது பல முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து ஒரு லேடி சூப்பர் ஸ்டார் போல இருந்து வந்தார் நடிகை சாவித்திரி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம்,
கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக் கொண்டு வந்த சாவித்திரி கடந்த 1981 ஆம் ஆண்டு இறந்து விட்டார் . ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு வீட்டிலேயே ,
சிறுத்தையை வளர்த்தி அனைவரையும் ஆச்சிரியப்பட வைத்திருக்கிறார் நடிகை சாவித்திரி . அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…