தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் தற்போது வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதுவும் ஆரம்பத்தில் நடிப்பிற்காக பல்வேறு விமர்சனங்களை சந்தித்த நடிகர் விஜய் தற்போது டாப் நடிகர் என்ற அந்தஸ்திலும் இருந்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் ஒரு நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றிருந்தது . இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் . அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை பெரிய அளவில் ,
நம்பி இருக்கிறார் நடிகர் விஜய் . பின்னர் இந்த படத்தை முடித்த கையோடு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 படத்திலும் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் வெளியாகி உள்ளது.
அது என்னவென்றால் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது படத்தை முடித்த கையோடு இரண்டு, மூன்று ஆண்டுகள் சினிமாவை விட்டு விலக உள்ளாராம் நடிகர் விஜய் . அப்படிசினிமாவை விட்டு விலகி அரசியலில் முழு ஈடுபாடு காட்டப் போவதாகவும்,
பின்னர் மூன்று வருடங்கள் கழித்து பழைய படி நடிக்க வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை , இருந்தாலும்இந்த தகவலை பார்த்த விஜய் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்…