April 29, 2024

எந்த நடிகருக்கும் இல்லாத செல்வாக்கு ..!! விஜயகாந்துக்கு எப்படி வந்தது தெரியுமா ..?? கேட்டாலே புல்லரிக்குது ..!! இப்படியும் ஒரு மனிதரா ..??

தற்போது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . இதனால் அவர் மீண்டும் எங்களை எல்லாம் பார்க்க வர வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்தை ஏன் எல்லா ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.  அந்த வகையில் பிறப்பால் ,

பணக்கார வீட்டுப் பிள்ளையாக பிறந்தாலும் அதை ஒருபோதும் வெளியில் காட்டிக் கொள்ளாதவர் விஜயகாந்த் . அப்படி சினிமா மீது இருந்த ஆசையில் சென்னைக்கு வந்த விஜயகாந்த் பல வருட போராட்டத்திற்கு பிறகு சினிமாவில் அறிமுகமானார் . இப்படி அறிமுகமான குறிப்பிட்ட,

காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் விஜயகாந்த் . இப்படி இவர் மேலே வந்ததும் பல நடிகர்களையும் இயக்குனர்களையும் தூக்கி விட்டார் விஜயகாந்த்.  இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்தால் சினிமாவிற்கு வந்தவர்கள் ஏராளம் உண்டு .

அது மட்டுமல்லாமல் அப்போதெல்லாம் நடிகர்களுக்கு ஒரு சாப்பாடு , படக்குழுவினர்களுக்கு ஒரு சாப்பாடு என்ற பாரபட்சம் இருந்து வந்தது. இதையெல்லாம் உடைத்து நான் என்ன சாப்பிடுகிறேனோ , அதையே தான் எல்லோரும் சாப்பிட வேண்டும் என்று பட குழுவினர்கள்,

அனைவருக்கும் தினமும் கறி சாப்பாடு போட்டு வயிறு குளிர வைத்தார் விஜயகாந்த் . அது மட்டுமல்லாமல் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது மொத்த  கடனையும் அடைத்தார்.  அதோடு விஜயகாந்த் நிஜத்தில் நடிக்க தெரியாதவர் என்பதும் அனைவருக்கும்,

தெரிந்த ஒன்றுதான் . இப்படி மக்களில் ஒருவராகவே விஜயகாந்த் வாழ்ந்து வந்ததால் தான் அவரை இப்போதும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *