ராஜ்கிரண் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் , இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் தயாரிப்பாளராக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த ராஜ்கிரண் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அரண்மனைக்கிளி ,எல்லாமே என் ராசாதான் ,
மாணிக்கம் , பாசமுள்ள பாண்டியரே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் ராஜ்கிரண் . பின்னர் தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் ராஜ்கிரண் . அந்த வகையில் சமீப காலமாக குணச்சித்திர நடிகராக ,
கலக்கிக்கொண்டு வருகிறார் . மேலும் திருமணமான ராஜ்கிரணுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பெற்றோர்களின் இறப்பிற்கு கூட ராஜ்கிரண் செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நடிகர் ராஜ்கிரணின் சொந்த ஊர் ,
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை பகுதியாம். ஆனால் நடிகர் ராஜ்கிரண் அவருடைய சொந்த ஊருக்கு வந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் ஆகிறதாம் . இன்னும் சொல்லப்போனால் ராஜ்கிரண் அவருடைய பெற்றோர்களின் இறப்பிற்கு கூட வராது தான்,
மிகப்பெரிய கொடுமையே . இதனால் ராஜ்கிரணுக்கு அந்த ஊரில் இருப்பவர்கள் யாரும் மரியாதை கொடுப்பதில்லையாம். இதை பார்த்த ரசிகர்கள் பெத்தவங்களின் இறப்பிற்கு கூட போகாத கல் நெஞ்சக்காரரா ராஜ்கிரண் என்று கூறி வருகின்றனர் …