கடந்த வாரம் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவை இப்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை கவர்ந்து வைத்திருந்தார் நடிகர் மாரிமுத்து. மேலும் 100 மேற்பட்ட படங்களில் நடித்தும் கிடைக்காத வரவேற்பு இவருக்கு சீரியலில் கிடைத்தது தான் ஆச்சிரியமே . அப்படி எதிர்நீச்சல் சீரியலில் ஏஜிஎஸ் என்ற,
கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் கவர்ந்த மாரிமுத்து திடீரென இறந்து விட்டதால் அவருக்கு பதில் யார் நடிக்க போகிறார் என்ற பேச்சு இருந்து வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் மாரிமுத்துவின் கடைசி ஆசையை சிவகுமார் ,சூர்யா, கார்த்தி,
நிறைவேற்றி வைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சினிமாவில் பல வருடங்களாக இருந்தாலும் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தாராம் மாரிமுத்து. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து கிட்டத்தட்ட ஒன்றை கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு ,
ஒன்றை கட்டியிருந்தாராம் நடிகர் மாரிமுத்து . அப்படி பார்த்து பார்த்து கட்டிய வீட்டை சிவகுமார், சூர்யா , கார்த்தி முன்னணியில் கிரகப்பிரவேசம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார் நடிகர் மாரி முத்து. ஆனால் அதற்குள் இறந்துவிட்டார் நடிகர் மாரிமுத்து.
இதனால் மாரிமுத்து கட்டிய ஆசை இல்லத்தின் விழாவிற்கு கண்டிப்பாக சிவகுமார் ,சூர்யா, கார்த்தி கலந்து கொண்டு மாரிமுத்துவின் கடைசி ஆசை நிறைவேற்றுவார்கள் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது …