தற்போது தமிழ் சினிமா உலகில் பிசியான இசையமைப்பாளராக கலக்கி கொண்டு வருகிறார் அனிருத் . தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார் அனிருத் . பின்னர் தொடர்ச்சியாக இவர் இசையமைத்த திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது .
இதன் பிறகு முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார் அனிருத். அந்த வகையில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ,விஜய் ,அஜித் ,சூர்யா போன்ற பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கென,
ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் அனிருத் . இதைத்தொடர்ந்து தற்போது தலைவர் 170, தலைவர் 171 ,இந்தியன் 2 , விடாமுயற்சி என்று நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் அனிருத் . இப்படி தொடர்ச்சியாக இசையமைத்து வருவதால் ,
அவருக்கு ஓய்வே இல்லாமல் இருந்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அனிருத் , கடந்த மூன்று மாதங்களில் நிறைய படங்களுக்கு இசையமைத்து விட்டேன். அதனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு ,
ஓய்வெடுக்க முடிவு செய்து இருக்கிறேன் . அதன் பிறகு மீண்டும் படங்களுக்கு இசையமைப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது இந்த தகவல் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது …