தற்போதுள்ள பல இளைஞர்களை தவறான பாதைக்கு வழிவகுக்கிறது சினிமாவும் மற்றும் சினிமா நடிகர்களும் தான் . அந்த வகையில் ஒரு நடிகர் சிகரெட் பிடிப்பதையோ அல்லது மது அருந்துவதையோ பார்த்து பிடித்து போய் அதையே ரசிகர்களும் செய்கின்றனர். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகரெட் பிடிப்பதை பார்த்து தான் நானும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்,
பிரபல இயக்குனர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் பி எஸ் மித்ரன் தான். கடந்த 2018 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் பி எஸ் மித்ரன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,
சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ, கார்த்தியை வைத்து சர்தார் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார் இயக்குனர் பி எஸ் மித்ரன் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பேஸ் மித்ரன் சினிமா சமூகத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ,
பாதிப்பை ஏற்படுத்தும் . அப்படித்தான் அண்ணாமலை படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செம ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதை பார்த்து நானும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் இயக்குனர் பி எஸ் மித்ரன் . மேலும் இப்போதுள்ள இளைஞர்களுக்கு,
எது நல்லது , எது கெட்டது என்று நன்றாகவே தெரியும் என்று கூறுகிறார்கள் . ஆனால் உண்மையில் படங்களைப் பார்த்து பல இளைஞர்கள் இப்போதும் கெட்டுப்போய் கொண்டு தான் இருக்கிறார்கள். இதனால் பி எஸ் மித்ரன் கூறும் கருத்து ஏற்று கொள்ள வேண்டிய கருத்தாக தான் உள்ளது…