அஜித் தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார் . சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதை அடுத்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ள விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித் . இப்படி இருக்கும் நிலையில் அஜித்தை பற்றி கிழி கிழின்னு கிழித்திருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் ஒருவர்.
அவர் வேறு யாருமில்லை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தான். தமிழில் வெளியான வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன், முன் தினம் பார்த்தேனே போன்ற பல திரைப்படங்களை தயாரித்து இருந்தவர் தான் மாணிக்கம் நாராயணன் .
இப்படி இருந்த நேரத்தில் தன்னுடைய அம்மா, அப்பா ஊருக்கு போவதற்காக மாணிக்கம் நாராயணனிடம் குறிப்பிட்ட தொகையை கடனாக வாங்கி இருக்கிறார் அஜித். இதன் பிறகு அந்த கடனை திருப்பி கேட்டால் அஜித்தின் மேலாளர் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா ,
என்று மிரட்டுகிறாராம் . மேலும் அஜித் படத்தில் மட்டும் நடிகர் இல்லை , வாழ்க்கையிலும் நன்றாக நடிக்கிறார் . அதுவும் அஜித்தின் மேலாளர் சரியான பிராடு என்றும், இவர் அஜித்திடம் என்னவெல்லாம் சொல்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இன்னொரு முறை அஜித்தை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு சென்ற மாணிக்க நாராயணனை வீட்டிற்குள்ளேயே அஜித்தின் மேலாளர் விடவில்லையாம் இதை பார்த்த ரசிகர்கள் அஜித்தும் இப்படிப்பட்ட நடிகரா என்று அதிர்ச்சியில் கூறி வருகின்றனர்…