மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பல பேரை தூக்கிவிட்டு அழகு பார்த்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் விஜய். ஆரம்பத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் விஜய் . பின்னர் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவான விஜய்க்கு இந்தத் திரைப்படம்,
கை கொடுக்கவில்லை . இதன்பிறகு விஜய்யை தூக்கி விட வேண்டும் என்பதற்காக அவர் நடித்த செந்தூரப்பாண்டி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து அந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்கினார் விஜயகாந்த். இதனாலேயே விஜயகாந்த் மீது விஜய்க்கு ஒரு தனி மரியாதை இருந்திருக்கிறது.
இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த் விஜய்யை தூக்கிவிட்டு அழகு பார்த்தார். ஆனால் விஜய் அவருடைய மகன்களை கண்டுக்கொள்ளவே இல்லை . விஜய் நன்றி மறந்து விட்டார் என்று பலரும் கூறி வந்தனர் . தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்.
அது என்னவென்றால் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் . இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களும் நடிக்க இருக்கிறாராம் . அதாவது ஏ ஐ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் கேப்டனுக்கு உயிர் கொடுக்க,
உள்ளார்களாம் வெங்கட் பிரபுவும் , விஜயும் . மேலும் விஜயகாந்தின் குடும்பத்திடம் சம்மதமும் வாங்கியுள்ளனர் . அதற்கு விஜயகாந்த் குடும்பத்தினர் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அந்த காட்சிகளை எங்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்களாம்…