April 26, 2024

கொண்டாடப்பட வேண்டிய நடிகரான விதார்த்தின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள்.  ஆனால் அதில் ஒரு சிலருக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் விதார்த் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விதார்த் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது .பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து முதல் இடம், ஜன்னல் ஓரம், காடு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . ஆனால் இந்த படங்கள் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை .

ஆனால் இதன் பிறகு இவர் நடித்த குற்றமே தண்டனை ,ஒரு கிடாயின் கருணை மனு ,குரங்கு பொம்மை ,காற்றின் மொழி ,பயணிகள் கவனிக்கவும் போன்ற திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.  குறிப்பாக இறுகப்பற்று திரைப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் ,

நடிகர் விதார்த்  . இதனிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு காயத்ரி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திராத நடிகர் விதார்த்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *