சினிமாவை பொருத்தவரை ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தால் அது ரசிகர்களுக்கே வெறுத்துப் போய்விடும். அப்படி கள்ளக்காதலால் காணாமல் போயிருக்கிறார் ஒரு நடிகை . அவர் வேறு யாரும் இல்லை நடிகை மனிஷா யாதவ் தான் . கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான வழக்கு எண் 18 / 9 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக ,
அறிமுகமானார் மனிஷா யாதவ். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம் ,பட்டய கிளப்பணும் பாண்டியா, திரிஷா இல்லைனா நயன்தாரா, ஒரு குப்பை கதை போன்ற,
பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை மனிஷா யாதவ் . ஆனால் இவர் பெரிய அளவில் வளராததற்கு காரணமே அவருடைய கதை தேர்வு தான். அந்த வகையில் வழக்கு எண் 18 / 9 படத்தில் ரகசியமாக ஒருவரை காதலிப்பது போல நடித்திருப்பார் நடிகை மனிஷா யாதவ்.
அதேபோன்று ஆதலால் காதல் செய்வீர் ,திரிஷா இல்லனா நயன்தாரா , ஒரு குப்பை கதை போன்ற திரைப்படங்களிலும் கள்ளக்காதலில் இருப்பது போல தான் நடித்திருப்பார் நடிகை மனிஷா யாதவ். இப்படி தொடர்ந்து அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்து வந்ததால் ,
ஒரு கட்டத்தில் இவருக்கு வருவதெல்லாம் அதே மாதிரி கதாபாத்திரங்கள் தானாம் . இதனால் நொந்து போய் சினிமாவையே வெறுத்த நடிகை மனிஷா யாதவ் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இதன் பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை …