தமிழ் சினிமா உலகை கலக்கிக் கொண்டு வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார் . துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடா முயற்சி என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் அஜித். மேலும் இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி பல துறைகளில் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் .
அப்படி அஜித் கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற பலவற்றில் வல்லவர் ஆவார் . ஆனால் இவர் சமையல் துறையிலும் வல்லவர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று . அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் ஜெய் அஜித் குறித்து கூறியதாவது ,
இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாளில் நான் சிம்பு போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டோம். அந்த நிகழ்ச்சியில் அஜித் அண்ணாவும் கலந்து கொண்டார். உடனே நாங்கள் அனைவரும் பிரியாணி செய்து கொடுங்க அண்ணா என்று அன்பாக கேட்டோம் .
உடனே அஜித் அண்ணா ஒரு 45 நிமிஷம் வெயிட் பண்ணுங்க பிரியாணி செஞ்சு தரேன் என்று கூறினார். பின்னர் நாங்கள் ஓரளவிற்கு தான் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அஜித் அண்ணா செய்த பிரியாணி அங்கு இருந்த எல்லோருடைய எதிர்பார்ப்பையும் ,
சுக்குநூறு ஆக்கியது . அந்த அளவிற்கு அஜித் அண்ணா செய்த பிரியாணி எங்களுக்கு மிகவும் பிடித்தது . இன்னும் சொல்லப்போனால் அவருடைய பிரியாணிக்கு நான் அடிமை என்று தான் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார் நடிகர் ஜெய்…