உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ள கமல் அடுத்ததாக இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இந்தப் படத்தை முடித்த கையோடு ,
இயக்குனர் எச் வினோத் கமலின் 233 வது படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கான வேலைகள் தற்போது நடந்து வருகிறது . இதைத்தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைப் படத்திலும் நடிக்க இருக்கிறார் கமல் .
இந்த படத்தில் கமலுடன் இணைந்து ஜெயம் ரவி ,துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் ,திரிஷா ,ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இதை முடித்த கையோடு ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவு இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்திலும்,
நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன் . இதை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள விக்ரம் 2 படத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படங்கள் எல்லாம் முடிவதற்கு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகிவிடுமாம் . இதனால் இந்த பத்து வருடங்களுக்கு யாருமே ,
கமலிடம் கதை சொல்ல முடியாது என்று கூறப்படுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 3 படத்திற்கு மட்டுமே கால் சீட் கொடுத்த நிலையில், கமல்ஹாசன் ஐந்து படங்களுக்கு கால் சீட் கொடுத்தது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது…