தமிழ் திரையுலகில் ஒரு முக்கியமான இயக்குனர் என்றால் அது இயக்குனர் வெற்றிமாறன் தான். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த வெற்றிமாறன் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தார் இயக்குனர் வெற்றிமாறன்.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆடுகளம் ,விசாரணை ,வட சென்னை, அசுரன் ,விடுதலை என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இதனாலையே இவருடைய படத்தில் நடித்து விட வேண்டும் என்று ,
பல நடிகர்கள் தவம் கிடந்து காத்துக் கொண்டிருக்கின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை 2 படத்தை இயக்கிக் கொண்டு வரும் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் அல்லது,
விஜய்யை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர் . ஆனால் என்னுடைய அடுத்த படம் அவரோடு தான் என்று அறிவித்துவிட்டார் இயக்குனர் வெற்றிமாறன் . அவர் வேறு யாருமில்லை நடிகர் அஜித் தான். அந்த வகையில் அஜித்திடம் கதை ஒன்றை,
சொல்லி சம்மதம் வாங்கி விட்டாராம் இயக்குனர் வெற்றிமாறன் . அந்த படத்தை எல்ரெட் குமார் என்பவர் தயாரிக்க உள்ளாராம் . கூடிய விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…