கடந்த ஒரு வாரமாக மன்சூர் அலிகான் – திரிஷா விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் எப்போதும் விளையாட்டாக பேசும் மன்சூர் அலிகான் கடந்த வாரம் திரிஷாவை பற்றி கொச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கிருக்கிறார். இதனால் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தார்கள் . இப்படி இருக்கும் நிலையில் மன்னிப்பே கேட்க மாட்டேன் ,
என்று சொல்லிய மன்சூர் அலிகான் தற்போது திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு இருக்கிறார் . அந்த வகையில் மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஒரு வாரமாக கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி பெற்று விட்டேன். எனக்காக வாதிட்ட தலைவர்கள்,
நடிகர்கள் யாவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் . ஜனநாயகத்தின் நான்காவது தூண் மணிப்பூர் காத்ராஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன்கொடுமைகள் நித்தம் மத கலவர வன்கொடைமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது . என்னுடைய இளமை காலம் ,
யாவும் திரைத்துறையில் இழந்துவிட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும் பாத்திரங்கள் என்னவோ சிறு மீன்களாக தான் அமைந்தது. இனிவரும் நாட்களாவது ஆக்கப்பூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு . இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு சகோதரத்துவத்துடன் உழைக்க அருள்,
புரிவாய் இறைவா , எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு . இல்லறமாம் நல்லறத்தில் நீ மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக ஆமீன் என்று குறிப்பிட்டிருந்தார்…