சமீப காலமாக சினிமா நடிகர்களுக்கு இணையான பெயரும் புகழும் யூடியூபர்களுக்கும் கிடைத்து வருகிறது . அப்படி தன்னுடைய பைக் பயணங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் டிடிஎஃப் வாசன் . கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் . அதுவும் இவர் வெளியே வந்தாலே ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் .
இப்படி ஹீரோக்கணக்காக வலம் வந்த டிடிஎஃப் வாசன் தற்போது இயக்குனர் செல் அம் என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வந்தார் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்தபோது,
நிலை தடுமாறி பயங்கர விபத்துக்கு ஆளானார் டிடிஎஃப் வாசன். பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார் டிடிஎஃப் வாசன் . குறிப்பாக அவருடைய 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் சுக்குநூறாய் போனது . இப்படி இருந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார்,
வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது டிடிஎஃப் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளாராம் காஞ்சிபுரம் ஆர்டிஓ . அந்த வகையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதால் தான்,
இப்படி ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வரை டிடிஎஃப் வாசன் பைக் ஓட்ட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது.இதை கேட்ட டிடிஎஃப் வாசனின் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர் …