தேனிசைத் தென்றல் தேவா என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் தேவா கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இருந்தாலும் இவருக்கு கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அண்ணாமலை ,சூரியன், செந்தூரப்பாண்டி,
பாட்ஷா, ஆசை ,காதல் கோட்டை ,அவ்வை சண்முகி , காலமெல்லாம் காதல் வாழ்க போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக இவர் இசையமைத்த பல பாடல்கள் இளையராஜா இசையமைத்தது என்று,
பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு இளையராஜாவுக்கு இணையாக தன்னுடைய இசையை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார் தேவா. மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று இதுவரை நான் ஒரு படங்களுக்கு மேல்,
இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார் . இதனிடையே திருமணமான தேவாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் தேவா அவர்களின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது …