பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை ஹீரோவாகிவிட்டால் அதை நழுவ விடாமல் அப்படியே மார்க்கெட் இருக்கும் வரை நடித்து வருவார்கள் . ஆனால் ஹீரோவாக அறிமுகமாகி இன்று தவிர்க்க முடியாத வில்லனாக கலக்கி கொண்டு வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி . அப்படி தமிழில் வெளியான மாஸ்டர் ,பேட்ட,விக்ரம் , ஜவான் போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் விஜய் சேதுபதி.
இப்படி இருக்கும் நிலையில் இனிமேல் வில்லனாகவே நடிக்க போவதில்லை என்று அதிரடி முடிவு எடுத்துள்ளாராம் விஜய் சேதுபதி . காரணம் என்னவென்றால் , வில்லனாக நடிப்பதால் நிறைய அழுத்தம் அவருக்கு இருக்கிறதாம் . குறிப்பாக தன்னைவிட ஹீரோ பவர்ஃபுல்லாக ,
தெரிய வேண்டும் என்பதற்காக இவரை பார்த்து பார்த்து நடிக்க வைக்கிறார்களாம் . இதனால் விஜய் சேதுபதி நடித்த பல காட்சிகளை கட் செய்துள்ளார்களாம் . இந்த காரணத்தால் தான் விஜய் சேதுபதி இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது…