April 28, 2024

மன்சூர் அலிகான் தப்பிச்சிட்டாரு ..!! இப்ப இவரு மாட்டிக்கிட்டாரு ..!! அடுத்த பஞ்சாயத்தில் சிக்கிய தமிழ் இயக்குனர் ..!! என்னயா நடக்குது இங்க ..??

சமீபத்தில் தமிழ் சினிமா உலகில் பூகம்பம் போல வெடித்தது மன்சூர் அலிகான் – திரிஷா விவகாரம் தான் . விளையாட்டாக பேசுவதாக நினைத்து திரிஷாவை கொச்சையாக பேசிவிட்டார் மன்சூர் அலிகான்.  இதுதான் தற்போது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த பிரச்சனையால் தற்போது பல பிரபலங்களின் உண்மை முகம் வெளியாகி வருகிறது.  அந்த வகையில் தற்போது  மன்சூர் அலிகானை ,

தொடர்ந்து இந்த இயக்குனரும் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் சீனு ராமசாமி தான் .  தென்மேற்கு பருவக்காற்று , நீர்ப்பறவை ,தர்மதுரை , மாமனிதன் போன்ற பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருந்தவர் இயக்குனர் சீனு  ராமசாமி.

இந்நிலையில் இளம் நடிகைக்கு  சீனு ராமசாமி கொடுத்த டார்ச்சரால் அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார் பிரபல சினிமா விமர்சகர் . அவர் தான் நடிகை மனிஷா யாதவ் . தமிழில் வெளியான வழக்கு என் 18/9 என்ற படத்தின் மூலம் அறிமுகமான ,

மனிஷா யாதவ் பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர் , ஜன்னல் ஓரம் , திரிஷா இல்லைனா நயன்தாரா , ஒரு குப்பை கதை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இதனிடையே சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்திருக்கிறார் ,

நடிகை மனிஷா யாதவ் . ஆனால் சீனு ராமசாமி கொடுத்த டார்ச்சரால் அவர் சினிமாவை விட்டே  விலகிவிட்டாராம் மனிஷா யாதவ் .  இதனால் இவருடைய பஞ்சாயத்து தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *