பூமிகா சாவ்லா ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். தெலுங்கு படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை பூமிகா கடந்த 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம் ,சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் ,சித்திரையில் நிலா சோறு ,கொலையுதிர் காலம், கண்ணை நம்பாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை பூமிகா சாவ்லா .
மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக்கொண்டிருக்கும் போதே கடந்த 2௦௦7 ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்,
நடிகை பூமிகா . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் 45 வயதாகும் பூமிகா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி உள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் உயிர் உங்களுடையது தேவி என்று கூறி வருகின்றனர்…