சங்கீதா ஒரு பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார் . ஆரம்பத்தில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் நடிகை சங்கீதா . பின்னர் தமிழ் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை சங்கீதா ராஜ்கிரண் நடிப்பில் வெளியான எல்லாமே என் ராசாதான் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து புள்ள குட்டிக்காரன் ,
அம்மன் கோவில் வாசலிலே, பூவே உனக்காக ,காலம் மாறி போச்சு, நம்ம ஊரு ராசா, கங்கா கௌரி ,பொங்கலோ பொங்கல் , கல்யாண வைபோகம் ,கும்பகோணம் கோபாலு , எதிரும் புதிரும் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை ,
பிடித்துக் கொண்டார் நடிகை சங்கீதா. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வந்தார் . கடைசியாக இவர் தமிழில் வெளியான கண் திறந்து பாரம்மா என்ற படத்தில் நடித்திருந்தார் . அதன் பிறகு,
கடந்த 23 வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகை சங்கீதா . இப்படி இருக்கும் நிலையில் தற்போது மலையாள படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் நடிகை சங்கீதா . அந்த வகையில் மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபன் நடிப்பில்,
உருவாகும் சாவீர் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம் நடிகை சங்கீதா . இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் எத்தனை வருஷம் ஆச்சு இவரை இப்படி பார்த்து என்று கூறி வருகின்றனர்…