April 27, 2024

கருத்து சொல்லியே ரசிகர்களை கவர்ந்த சமுத்திரக்கனியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? முதல் முறையாக வெளியான புகைப்படங்கள் ..!! இதோ நீங்களும் பாருங்க ..!!

சமுத்திரக்கனி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார்.  ஆரம்பத்தில் இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் சமுத்திரக்கனி . பின்னர் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இருந்தாலும் ஒரு இயக்குனராக இவர் வெற்றி கண்டது நாடோடிகள் படத்தின் மூலம் தான் .

இந்த படத்தை தொடர்ந்து போராளி , நிமிர்ந்து நில் ,அப்பா , தொண்டன் என்று சமூக கருத்துகளை மையமாக வைத்து படங்களை இயக்கியிருந்தார் சமுத்திரக்கனி . இன்னும் சொல்லப்போனால் சமுத்திரகனி என்று சொன்னாலே மக்களுக்கு கருத்து என்று தான் ஞாபகத்துக்கு வரும் .

அந்த அளவிற்கு கருத்து சொல்லியே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தார் சமுத்திரக்கனி . ஆனால் தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேர நடிகராகவே மாறிவிட்டார் சமுத்திரக்கனி . அந்த வகையில் தற்போது இவர் பல மொழி படங்களிலும் கலக்கிக்கொண்டு வருகிறார் .

இதனிடையே ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட சமுத்திரக்கனிக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில்  இதுவரை பலரும் பார்த்திடாத சமுத்திரக்கனியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *