தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல முன்னணி நடிகர்கள் தங்களின் படங்களில் மற்ற மொழி நடிகைகளை போடுவதற்கு தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி வெளியூர் நடிகை என்றால் இனிக்குது, உள்ளூர் நடிகை என்றால் கசக்குதா என்று சரமாரியாக கேள்விகளை உள்ளார் பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.
ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரண்டு பசங்களுக்கு அம்மாவாக நடித்து பிரபலமானார் . இதன் பிறகு தான் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகையாக கலக்கி கொண்டு வருகிறார் . ஆனால் இவருக்கு திறமையான நடிப்பு இருந்தும் கூட,
இவரை முன்னணி நடிகர்கள் கண்டுகொள்ளாத தான் சோகமே . இதனால் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை க்கள ங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஆனால் அதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் . அது என்னவென்றால் தமிழ் சினிமா உலகில் ஒரு சில நடிகர்களை தவிர மீதி உள்ளவர்கள் எல்லாம் என்னை புறக்கணிக்கிறார்கள். அதோடு பெரிய பட்ஜெட் படங்களில் என்னை தேர்வு செய்தாலும்,
உடனே என்னை தூக்கி விடுகிறார்கள் . குறிப்பாக மற்ற மொழி நடிகைகளுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று கூறியிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . இதைப் பார்த்து ரசிகர்கள் இவருக்கு யாராவது ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா என்று கூறி வருகின்றனர்…