வனிதா விஜயகுமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை ஆவார். கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமான வனிதா தொடர்ந்து மாணிக்கம் ,நான் ராஜாவாகப் போகிறேன், எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல், போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இப்படி இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ,
இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான். இதன் மூலம் எந்த அளவிற்கு பெயரை சம்பாதித்தாரோ அதே அளவிற்கு பெயரையும் கெடுத்துக் கொண்டார் நடிகை வனிதா. மேலும் இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும்,
நடித்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வனிதா இப்போது நைட்ல யாரும் கதவ தட்ட மாட்டேங்கிறாங்க எனக்கு ஏக்கமா இருக்கு என்று வெளிப்படையாக கூறியுள்ளார் . அந்த வகையில் அவர் கூறியதாவது,
என்னுடைய அம்மா மஞ்சுளா இருக்கும் வரை தினமும் நைட்டு இரண்டு மணிக்கு போன் பண்ணி என்ன பண்றேன்னு கேப்பாங்க , அதே மாதிரி வீட்டில் இருந்தாலும் அதே போல தான் நைட்டு வந்து கதவைத் தட்டி என்ன பண்றேன்னு கேட்பாங்க. அப்போதெல்லாம் எனக்கு,
மிகவும் கடுப்பாக இருக்கும் . ஆனால் இப்போது என்னுடைய அம்மா இறந்த பிறகு பல இரவுகளில் எனக்கு தூக்கமே வருவதில்லை . இப்போது கதவைத் தட்டி விசாரிக்க கூட யாருமே இல்லை என்று ஏக்கம் அதிகமா இருக்கு என்று கூறியிருந்தார் நடிகை வனிதா விஜயகுமார் …