லெஜன்ட் சரவணன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தொழிலதிபர் ஆவார் . சரவணா ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்தி வரும் சரவணன் ஆரம்பத்தில் தன்னுடைய கடை விளம்பரங்களில் நடித்துக்கொண்டு வந்தார் . குறிப்பாக அப்போது இவரை ரசிகர்கள் கலாய்த்து வந்தனர் . இதன் பின்னர் கடந்த வருடம் இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் வெளியான தி லெஜெண்ட்,
என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் லெஜன்ட் சரவணன். இந்தப் படத்தையும் இவர் தான் தயாரித்திருந்தார் . ஆனால் இப்படி வெளியான திரைப்படம் மோசமான வரவேற்பையே பெற்றது. அப்படி இருந்தும் கூட தற்போது அடுத்ததாக ஒரு படத்தில் ஹீரோவாக ,
நடித்துக் கொண்டு வருகிறாராம் லெஜெண்ட் சரவணன். இப்படி இருக்கும் நிலையில் திறப்பு விழா ஒன்றிற்கு வந்திருந்த லெஜன்ட் சரவணன் கூறியதாவது , இன்று மக்களின் பொழுதுபோக்கு விஷயத்தில் சினிமா துறை தான் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது .
குறிப்பாக காக்கா – கழுகு கதை , இந்தப் பட்டம் அவருக்கு , இந்த பட்டம் இவருக்கு என்று எதுவுமே கிடையாது . நாம் உழைத்தால் மட்டுமே நமக்கும் நல்லது , நம்முடைய நாட்டிற்கும் நல்லது என்று தன்னுடைய பாணியில் கூறியிருந்தார் லெஜெண்ட் சரவணன். குறிப்பாக உழைப்பால் ,
உயர்ந்தவர் சரவணன் அருள் . அதனால் தான் இவர் இப்படி ஒரு கருத்தை கூறி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …