யூடி யூ ப் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் டிடி எஃப் வாசன். தற்போது மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் . அந்த வகையில் இயக்குனர் செல் ஆம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை பட்ஜெட் பிலிம் கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது . அப்படி இந்த படத்திற்காக டிடிஎஃப் வாசனுக்கு 1.8 கோடி சம்பளம் ,
பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் இப்போது முன்னணி நடிகர்களாக கலக்கி கொண்டு வரும் அஜித், விஜய் ,சூர்யா கூட முதல் படத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கி இருக்க மாட்டார்கள் . இன்னும் சொல்லப்போனால் அறிமுகமாகி பல வருடங்கள் ஆகியும் ஒரு கோடி சம்பளத்தைக் கூட,
தொட முடியாமல் பல நடிகர்கள் போராடி வருகின்றன ர் . இப்படி இருக்கும் நிலையில் முதல் படத்திற்கே இவருக்கு இவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது கோலிவுட் சினிமாவையே ஆச்சி ரியத்தில் ஆழ்த்தியுள்ளது . இதை பார்த்து ரசிகர்கள் ஒரே படத்தில் ஓஹோன்னு வாழ்க்கை மாறிவிட்டது போல என்று கூறி வருகின்றனர்…