May 2, 2024

என்னுடைய வாழ்க்கையே இவர்களோடு தான் ..!! 39 வது பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய நயன்தாரா ..!! வைரலாகும் புகைப்படங்கள் இதோ ..!!

தற்போது தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா . திறமை இருந்தால் சாதாரண பெண் கூட நடிகையாகலாம் என்ற சொல்லுக்கு உதாரணம் நடிகை நயன்தாரா தான்.  அப்படி மலையாள படத்தின்  தன்னுடைய திரைப்பயணத்தை  தொடங்கிய நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நயன்தாரா.  அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை கலக்கி வந்த ரஜினி ,விஜய் ,அஜித் ,சூர்யா ,விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து,

பிரபலமானார் நயன்தாரா.  இப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்தில்  கொடி கட்டி பறந்து வந்த நயன்தாரா கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர் .

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய 39 ஆவது பிறந்த நாளை சிம்பிளாக வீட்டிலேயே கொண்டாடி இருக்கிறார் நயன்தாரா . அப்படி அந்த புகைப்படத்தை பகிர்ந்து என்னுடைய வாழ்க்கை இவர்களோடு தான் என்று பதிவிட்டு இருந்தார்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *