April 27, 2024

கல் நெஞ்சையும் கரைய வைத்த ஜிகர்தண்டா 2 ..!! படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ..!! அவர் சொன்ன விஷயம் தான் ஹைலைட் ..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் . இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா , நிமிசா சஜயன் ,சைன் டாம் சாக்கோ ,இளவரசு, நவீன் சந்திரா ,சத்யன் ,அரவிந்த் ஆகாஷ் ,சஞ்சனா நடராஜன் , விது போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் சக்கைபோடு போட்டு வருகிறது . இன்னும் சொல்லப்போனால் கல்நெஞ்சக்காரர்களையும் இந்த திரைப்படம் கரைய வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல காவியத்தை எடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினரை  நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அது மட்டுமல்லாமல் ஜிகர்தண்டா 2 படத்தை பாராட்டும் வகையில் ஒரு பக்கத்திற்கு ஒரு கடிதத்தையும்,

வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த். அந்த கடிதத்தில்  ஜிகர்தண்டா xx படம் ஒரு குறிஞ்சி  மலர் என்றும் கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு என்றும் , ராகவா லாரன்ஸின் நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் அபராம்  என்று கூறியுள்ளார் .

குறிப்பாக சூப்பர் ஸ்டார் இதற்கு முன்பு ஒரு படத்தை இப்படி பாராட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .தற்போது அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *