90களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சுகன்யா . கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சுகன்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சின்ன கவுண்டர் ,திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு ,வால்டர் வெற்றிவேல் ,மகாநதி, இந்தியன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ,
ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . மேலும் நடிகை சுகன்யா தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதை நிறுத்திய சுகன்யா தற்போது படங்களில்,
குணச்சித்திர நடிகையாக நடித்துக்கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இந்த கோவிலின் திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்காக சுகன்யா தன்னுடைய சார்பில்,
காணிக்கை ஒன்றை செலுத்தி இருக்கிறாராம் . அது என்னவென்றால் ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலை எழுதி இசையமைத்து பாடியிருக்கிறார் நடிகை சுகன்யா . தற்போது இந்த பாடல் ஆடியோ வடிவில் எழுதப்பட்டுள்ளதாம். விரைவில் வீடியோவாகவும்,
வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இது குறித்து பேசிய சுகன்யா, ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற இருக்கும் வேளையில் என்னுடைய சிறு காணிக்கையாக இந்த பாடலை நான் சமர்ப்பிக்கிறேன் என்று கூறியிருந்தார்…