தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வரும் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மேலும் பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று மேலோட்டமாக கூறிவந்த விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். அந்த வகையில் “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியின் பெயரை அறிவித்தது ,
மட்டுமில்லாமல் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறேன் என்றும் அறிவித்திருந்தார் நடிகர் விஜய். குறிப்பாக இன்னும் இரண்டு படங்களில் முடித்த கையோடு முழுநேர அரசியலில் களம் இறங்குவதாக கூறியிருந்தார் நடிகர் விஜய் . மேலும் இவர் அரசியலுக்கு வருகிறேன் என்று,
அறிவித்த நாளிலிருந்து இவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் விஜய் கூப்பிடவில்லை என்றாலும் அவருடைய கட்சியில் நான் சேர்ந்து கொள்வேன் என்று கூறி இருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை,
நடிகர் சமுத்திரகனி தான் . தமிழ் சினிமா உலகில் நல்ல இயக்குனராகவும் , நடிகராகவும் கலக்கிக்கொண்டு வரும் சமுத்திரகனி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியதாவது, விஜய் ஒரு நல்ல மனிதர் , அவர் அரசியலுக்கு வந்தால் என்னுடைய முழு ஆதரவு அவருக்கு இருக்கும்.
இன்னும் தேவைப்பட்டால் அவருடன் இணைந்து பயணிக்கவும் நான் தயாராக இருக்கிறேன். மேலும் அவர் என்னை பிரசாரத்துக்கு கூப்பிடவில்லை என்றாலும் நான் முதல் நாளாக அவருடன் சென்று விடுவேன் என்று கூறியிருந்தார் நடிகர் சமுத்திரக்கனி…