ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகர் ஆவார். இவர் சினிமாவை தாண்டி மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். இப்படி இருக்கும் நிலையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினியை விமர்சித்த நாம் தமிழர் கட்சியினரை வெளுத்து வாங்கி இருந்தார் நடிகர் ராகவா லாரன்ஸ் . இதனால் இவருக்கும் சீமானுக்கும் இடையே கடந்த நாலு வருடமாக ,
ஒரு மறைமுகமான பகை இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ரஜினியால் இவர்களுடைய பஞ்சாயத்து ஓய்ந்து விட்டதாம் . அந்த வகையில் ஜெயிலர் படத்தை முடித்தவுடன் இமயமலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார் வரும் வழியில் உத்தி ரப் பிரதேசம் மாநிலத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது மட்டுமல்லாமல்,
அவருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி இருந்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. வயதில் இளையவரின் காலில் விழலாமா என்று ரஜினி ரசிகர்களே கொந்தளித்தனர் . இப்படி இருக்கும் நிலையில் இது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள். அதற்கு பதில் அளித்த சீமான் கூறியதாவது ,
தன்னுடைய மன அமைதிக்காக ரஜினிகாந்த் இமயமலை சென்றார் . மேலும் அவர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது அவருடைய தனிப்பட்ட விருப்பம் தான். இதற்குப் போய் அவரை தேவையில்லாமல் தொல்லை செய்யக்கூடாது. அப்படி அவர் காலில் விழுந்ததால் வெங்காய விலை எல்லாம் என்ன ஏறி விட்டதா .? என்று ,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஆதரவாக பேசி இருந்தார் சீமான் . இந்நிலையில் அந்த வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு சீமான் அண்ணனுக்கு நன்றி என்று தன்னுடைய நாலு வருடப் பகையை முடித்துக் கொண்டார் நடிகர் ராகவா லாரன்ஸ்…
I just saw this interview of Annan Seeman. My heartfelt thanks to Annan seeman. When you have spoken against Thalaivar, I have also spoken against you but now when you are speaking with love. I will come and see you soon with the same love. Thanks once again Annan seeman 🙏🏼🙏🏼 pic.twitter.com/aX6VT3QcH6
— Raghava Lawrence (@offl_Lawrence) August 28, 2023