மறைந்த நடிகர் மயில்சாமி ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மயில் சாமி ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்தார் . அப்படி இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்திருந்த மயில்சாமி கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் இறந்து விட்டார் . மேலும் இவருக்கு அன்பு மற்றும் யுவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் .
இவர்கள் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் மயில்சாமி இறந்து நான்கு மாதங்களே ஆன நிலையில் அவருடைய குடும்பத்தில் மிகப்பெரிய பூகம்பமே வெடித்துள்ளது. அது என்னவென்றால் மயில்சாமியின் மருமகள்கள் இருவருமே அடிக்கடி அவருடைய மாமியாருடன் சண்டையிட்டு வருகிறார்களாம் .
மயில்சாமி இருந்தவரை அதையெல்லாம் சமாதானப்படுத்தி வைத்திருந்தாராம். இப்படியொரு நிலையில் அவர் இறந்த பிறகு விவாகரத்து கேட்கும் அளவிற்கு இருக்கு முடிவு செய்துள்ளார்களாம் மருமகள்கள் . இந்த விஷயத்தை மயில் சாமியின் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் வெளிப்படையாக பகிர்ந்து இருந்தனர் …