April 30, 2024

சொன்னதை செய்துகாட்டிய ராகவா லாரன்ஸ் ..!! மற்ற நடிகர்கள் எல்லாம் இவரை பார்த்து கத்துக்கோங்க ..!!

கடந்த மாதம் 28 ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார் . இவருடைய திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே சோகத்தில் ஆழ்த்தியது . மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு விஜய் பிரபாகர்,  சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . இதில்  இளைய மகனான சண்முக பாண்டியன் சகாப்தம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்தில் விஜயகாந்த்தும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் இதன் பிறகு சண்முக பாண்டியன் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இன்னும் சொல்ல போனால் கேப்டன் விஜயகாந்த் முன்னணி நடிகராக இருக்கும்போது சூர்யா விஜய் போன்ற,

பல நடிகர்களை தூக்கி விட்டு அழகு பார்த்தார் . ஆனால் இவருடைய மகன்களை தூக்கி விடுவதற்கு ஒரு நடிகர்கள் கூட முன்வரவில்லை . ஆனால் விஜயகாந்த் இறந்ததற்கு பிறகு அவருடைய மகனுக்கு நான் உதவுகிறேன் என்று பல பிரபலங்கள் கூறிவந்த நிலையில், சொன்னதை செய்து காட்டியுள்ளார் ,

ராகவா லாரன்ஸ் . அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு அண்ணன் விஜயகாந்துக்காக தம்பி சண்முக பாண்டியன் படத்தில் எப்போது கூப்பிட்டாலும் நடிக்க வருகிறேன் என்று கூறியிருந்தார் . அந்த வகையில் சண்முக பாண்டியன் தற்போது படைத்தலைவன் என்ற படத்தில்,

நடித்துக்கொண்டு வருகிறார் . இந்த படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மூன்று நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளாராம் ராகவா லாரன்ஸ் . இதைப் பார்த்த ரசிகர்கள் ராகவா லாரன்ஸ் சொன்னதை செய்து காட்டி விட்டார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *