தமிழ் தொலைக்காட்சி சீரியல்களை பொறுத்தவரை டி ஆர் பி ல் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி மட்டும் தான். அப்படி கடந்த வருடம் தொடங்கியதில் இருந்து இப்போது வரை டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல் . இயக்குனர் திருசெல்வம் இயக்கத்தில் உருவான இந்த சீரியலில் பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . இந்த சீரியல் ஹிட்டானதற்கு முக்கிய காரணமே,
ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து தான். இவர் பேசிய ஒரு வசனத்திற்காகவே இந்த சீரியல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது என்று தான் சொல்ல வேண்டும் . இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதிர்நீச்சல் சீரியலை விரும்பி,
பார்த்தார்கள். ஆனால் சமீபத்தில் மாரடைப்பால் இறந்து விட்டார் நடிகர் மாரிமுத்து . இதனால் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு எந்த நடிகராலும் முடியவில்லை . குறிப்பாக வேல ராமமூர்த்தி , பசுபதி , ராதாரவி போன்ற பல நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும்,
பிரோஜனம் இல்லை . இப்படி இருக்கும் நிலையில் அந்த இடத்தை நான் நிரப்புகிறேன் என்று முன் வந்திருக்கிறார் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் மாரிமுத்துவின் தம்பி தான் . உருவத்திலும், பேச்சிலும் அப்படியே அண்ணனைப் போலவே இருக்கும் மாரிமுத்துவின் தம்பி,
நானே ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் . அப்படி வேறு எந்த நடிகராவது அந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த நடிகருக்கு நானே டப்பிங் கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம் …