கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் ஆவார் . விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய கீர்த்தி சுரேஷ் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . அப்படி சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ,
மாமன்னன் படத்திலும் தரமாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அந்த விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு பிறகு,
கீர்த்தி சுரேஷ் தானாம் . அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டங்களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வந்தவர் தான் ஜெயலலிதா அவர்கள் . அப்படி படப்பிடிப்பு நேரங்களில் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஜெயலலிதா.
அவருக்குப் பிறகு படப்பிடிப்பில் புத்தகம் படிக்கும் நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் மட்டும் தானாம் . குறிப்பாக இப்போதுள்ள பெரும்பாலான நடிகைகள் படப்பிடிப்பில் எங்கு சென்றாலும் ஃபோனும் கையுமாக தான் செல்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளுக்கு மத்தியில் கீர்த்தி சுரேஷ்,
நன்றாக கவிதை எழுதக்கூடிய நபரும் ஆவாராம் . அவருடைய கவிதைகள் பத்திரிகைகளில் கூட வந்திருக்கிறதாம் . இதனால்தான் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “அழகும் அறிவும்” கொண்ட நடிகை என்று கீர்த்தி சுரேஷை கமல்ஹாசன் பாராட்டி இருந்ததாக கூறப்படுகிறது…