பொதுவாகவே பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இந்த வருடம் பொங்கலுக்கு கிட்டத்தட்ட ஐந்து நடிகர்களின் படங்கள் வெளியானது . அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் ,அருண் விஜயின் மிசன் ,விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் ,தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் குண்டூர் காரம்.
இந்த ஐந்து திரைப்படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது . இதில் விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ் படத்தை தவிர மீதி எல்லா திரைப்படங்களுமே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது . இருந்தாலும் இந்த படங்களில் உண்மையான பொங்கல் வின்னர் யார்,
என்பதை வசூல் விவரத்தின் மூலம் தான் கணிக்க முடிந்தது . அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் முதல் நாளில் 9 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது . இதைத்தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் 14 கோடி வசூல் செய்து,
அயலான் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது . இதைத்தொடர்ந்து மேரி கிறிஸ்மஸ் மற்றும் மிசன் போன்ற திரைப்படங்கள் இரண்டு கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது. இதில் பொங்கல் வின்னர் யார் என்று சொன்னால் அது தெலுங்கு நடிகரான மகேஷ்பாபு தான் .
காரணம் இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 80 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது மேலும் வரும் நாட்கள் எல்லாம் விடுமுறை நாட்கள் என்பதால் மகேஷ்பாபுவின் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது…