பொதுவாகவே தமிழ் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் ரஜினி , கமல் படங்கள் என்றால் பெரிய அளவில் ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் ஒரு சில நடிகைகள் இவர்கள் இருவருடன் நடிப்பதை தான் பல நாள் கனவாகவும் வைத்துள்ளனர் . இப்படி இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ரஜினி , கமலுடன் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க மறுத்திருக்கிறார் ஒரு நடிகை , அவர் வேறு யாரும் இல்லை ,
a
நடிகை சாய் பல்லவி தான் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை சாய் பல்லவி . பின்னர் தமிழில் வெளியான,
தியா, மாரி 2 , என் ஜி கே , பாவ கதைகள் , கார்கி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சாய் பல்லவி . அதோடு இவர் தமிழ் ,தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் எல்லா மொழி படங்களிலும் நடித்து,
தவிர்க்க முடியாத நடிகையாக கொடிகட்டி பறந்து வரும் நடிகை சாய்பல்லவிக்கு ரஜினி , கமல் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டாராம். அதற்கு காரணம் என்னவென்றால் , பெரிய நடிகர்களின் படங்களில் நடிகைகளுக்கு ,
அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது . அப்படி முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் எப்போதும் நான் நடிக்க மாட்டேன் என்று தான் நடிகை சாய் பல்லவி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது …