தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை தமன்னா . மேலும் தமிழில் வெளியான கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார் . இந்நிலையில் எனக்கு தமிழ் மொழியை கற்றுத்தந்ததே அந்த நடிகர் தான் என்று வெளிப்படையாக ,
கூறியுள்ளார் நடிகை தமன்னா. அவர் வேறு யாருமில்லை நடிகர் கார்த்தி தான் . அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பையா என்ற படத்தின் மூலம் கார்த்தியும் தமன்னாவும் முதல் முறையாக இணைந்தனர். இப்படி வெளியான இவர்களுடைய முதல் திரைப்படமே ,
சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. குறிப்பாக இந்தப் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகு வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டாராம் கார்த்தி . மேலும் பையா படத்தை தொடர்ந்து சிறுத்தை மற்றும் தோழா ,
போன்ற படங்களிலும் தமன்னாவும், கார்த்தியும் ஒன்றாக நடித்திருந்தனர் . இந்த திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது . அதில் தமன்னாவும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய தமன்னா , நான் கார்த்தியால் தான் தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன். அவருடன் நடிக்கும் போது தான் எனக்கு தமிழை தெளிவாக கற்றுக் கொடுத்தார் என்று கூறியிருந்தார் நடிகை தமன்னா…