தமிழ் சினிமா உலகில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கிக்கொண்டு வந்தவர் நடிகர் பாண்டியராஜன். ஆரம்பத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த பாண்டியராஜன் கன்னி ராசி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் ஆண்பாவம் என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பாண்டியராஜன். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மனைவி ரெடி, நெத்தியடி ,
கோபாலா கோபாலா , கபடி கபடி போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் . இதன் பிறகு ஒரு கட்டத்தில் இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராகவே மாறிவிட்டார் நடிகர் பாண்டியராஜன். மேலும் வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்ட பாண்டியராஜனுக்கு,
பல்லவராஜன் ,பிரிதிவி ராஜன் , பிரேம் ராஜன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர் . இப்படி மூன்று மகன்கள் இருந்தாலும் ஒரே வீட்டிலே தான் கூட்டுக்குடும்பம் போல வாழ்ந்து வருகிறார்களாம் . இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படத்தை நீங்களும் பாருங்க…