சிவகார்த்திகேயன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார் . இவர் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு முக்கிய காரணம் அவருடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் . அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் அனைத்தும் ,
குடும்பத்தோடு பார்க்கும் விதமாக தான் இருக்கும் . இதனாலேயே ரசிகர்களிடையே இவருக்கு என்று ஒரு நல்ல பெயர் இருக்கிறது. ஆனால் அது தற்போது அப்படியே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் குறித்து சர்ச்சையை,
கிளப்பியிருந்தார் இசையமைப்பாளர் டி இமான். இதில் தவறு யார் மீது என்று இப்போது வரை தெரியவில்லை . இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அதற்கு அடிமையாகி விட்டார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை பிரியங்கா மோகன் . அந்த வகையில் ,
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியங்கா மோகனிடம் சிவகார்த்திகேயன் பற்றிய ரகசியம் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர் . அதற்கு யோசித்த பிரியங்கா மோகன் , சிவகார்த்திகேயனுக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும் . இன்னும் சொல்லப்போனால்,
அவர் அதற்கு அடிமையாகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக படப்பிடிப்பு நேரங்களில் ஏதாவது இனிப்பை சாப்பிட்டு கொண்டே இருப்பார் , எங்களையும் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்துவார் என்று கூறியிருந்தார் நடிகை பிரியங்கா மோகன்…