தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அப்படி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த சீரியல் களில் ஒன்று தான் யாரடி நீ மோகினி.
இந்த சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை நக்ஷத்ரா . இவர் இந்த சீரியல் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சீரியலில் நடித்து,
கொண்டிருக்கும் போதே விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நக்ஷத்ரா . திருமணமான இவர்களுக்கு சமீபத்தில் தான் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இப்படி இருக்கும் நிலையில் பிரசவ அறைக்கு செல்வதற்கு முன்பு,
மேக்கப் போட்டு சென்று இருக்கிறார் நடிகை நக்ஷத்ரா . அந்த வகையில் முகத்தில் கிரீம் போட்டுக் கொண்டு, உதட்டில் லிப் பாம் என்று ஃபுல் மேக்கப்புடன் ஆப்ரேஷன் தியேட்டருக்கு போனாராம் நடிகை நக்ஷத்ரா . இதைபார்த்த பலரும் இதுக்கு எதுக்கு மேக்கப் என்று,
கேட்டதற்கு என்னுடைய குழந்தை என்னை முதன்முறையாக பார்க்கும் போது நான் அழகாக இருக்க வேண்டும் அல்லவா என்று கூறினாராம் நடிகை நக்ஷத்ரா . இந்நிலையில் அவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது …