தமிழ் சினிமா உலகில் காலம் காலமாக இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையே பெரிய அளவில் போட்டி நிலவி வருகிறது. அப்படி அந்த காலத்தில் எம்ஜிஆர்- சிவாஜி தொடங்கி இந்த காலத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன்- விஜய் சேதுபதி வரை பல நடிகர்களை கூறலாம். இதில் ரஜினி – கமலுக்கு பிறகு கடுமையாக போட்டி போட்டுக் கொண்டவர்கள் தான் விஜய் மற்றும் அஜித் .
என்னதான் ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் தங்களுக்கு உரிய பாணியில் கதைகளை தேர்வு செய்து கலக்கி கொண்டு வந்தனர். மேலும் இவர்கள் சினிமா வாழ்க்கையில் போட்டி போட்டுக் கொண்டாலும், நிஜ வாழ்க்கையில் ,
இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர் என்று பலரும் நம்பிக் கொண்டிரு க்கிறார்கள் . ஆனால் உண்மையில் அஜித் மீது அப்போதே மிகப்பெரிய பொறாமை பட்டிருக்கிறார் நடிகர் விஜய். அந்த வகையில் எம்ஜிஆர் -சிவாஜி , ரஜினி- கமல் போன்றவர்கள் வரிசையில் அஜித்- விஜய் ,
என்று தான் அப்போது பத்திரிகையாளர்கள் எழுதி இருக்கிறார்கள். இதன் பிறகு விஜய் நேரடியாக அந்த பத்திரிகைகளுக்கு போன் செய்து இனிமேல் இப்படி எழுதக்கூடாது விஜய் – அஜித் என்று தான் எழுத வேண்டும் என்று சொல்லுவாராம் . அந்த அளவிற்கு அப்போதே தனக்கு பின்னர் தான் ,
அஜித்தின் பெயர் இருக்க வேண்டும் என்று தெளிவாக இருந்திருக்கிறாராம் நடிகர் விஜய். அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் தன்னை ஒரு ரஜினியின் ரசிகராக காட்டிக்கொண்ட விஜய் தற்போது அவருடைய பட்டத்துக்கு போட்டி போடுவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது…