April 29, 2024

ஏற்கனவே மூணு தொழில் ..!! இப்ப நாலாவது தொழிலை தொடங்கிய நயன்தாரா ..!! விட்டா முழு நேர தொழிலதிபராக மாறிவிடுவார் போலையே ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா . எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய தன்னம்பிக்கையாலும் ,  விடாமுயற்சியாலும் இன்று கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை நயன்தாரா.  குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தற்போது மண்ணாங்கட்டி ,அன்னபூரணி ,

என்று பல திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா . அது மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு நடிகை நயன்தாராவுக்கு அமைந்துள்ளது.  இதனிடையே கலந்த வருடம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை,

திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா . திருமணமான சில மாதங்களிலேயே இரட்டை ஆண் குழந்தைகளை வாடகை தாயின் மூலம் பெற்றுக்கொண்டார் . மேலும் திருமணத்துக்கு பிறகு பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நயன்தாரா தற்போது ,

முழு நேர தொழிலதிபராகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் ஏற்கனவே அழகு சாதன கம்பெனி , லிப் பாம் கம்பெனி  என்று தொடங்கிய நயன்தாரா அடுத்ததாக நாப்கின் பேடுகளை விற்கும் தொழிலையும் கையில் எடுத்துள்ளார் . அந்த வகையில் ,

நேற்று விஜயதசமியை முன்னிட்டு தன்னுடைய புதிய தொழிலை தன்னுடைய கணவருடன் இணைந்து தொடங்கியிருக்கிறார் நடிகை நயன்தாரா.  அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

 

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *