இந்த வருடம் தொடங்கியதில் இருந்தே பல முக்கிய தமிழ் சினிமா பிரபலங்கள் திடீர் திடீரென்று மரணம் அடைந்து வருகின்றனர் . இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய வசனத்தால் ரசிகர்களை கவர்ந்த மாரிமுத்து இன்று இறந்தது தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் உதவி இயக்குனராக ,
தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய மாரிமுத்து கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார் . இதன் பிறகு முழு நேர நடிகராக கலக்கிக் கொண்டு வந்த மாரிமுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அண்மையில்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார் நடிகர் மாரிமுத்து . குறிப்பாக இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான எதிர்நீச்சல் சீரியல் மூலம் தான் . இந்த சீரியலில் ,
இவர் பேசும் வசனத்திற்காகவே பெரிய அளவில் பிரபலமானார். இப்படி இருக்கும் நிலையில் இன்று டப்பிங் பேசும்போது மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . ஆனால் மரணத்தை முன்கூட்டியே கணித்திருக்கிறார் மாரிமுத்து .
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஒளிப்பரப்பான ஒரு எபிசோடில் , இப்பயெல்லாம் ஏதோ வலி வருது, ஏதோ கெட்டது நடக்கப்போவது என்று சொல்லி இருப்பார் மாரிமுத்து . தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…
View this post on Instagram