தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கிரீக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான். இந்த திரைப்படம் இவரை பட்டிதொட்டி,
எங்கும் பிரபலமாக்கியது . பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
குறிப்பாக இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,ஹிந்தி மொழி படங்களிலும் கலக்கிக்கொண்டு வருகிறார் . தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மொத்தம் நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ராஷ்மிகா மந்தனாவின்,
குடும்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் . முதல் முறையாக அவர்களுடைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…