சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலில் ஒன்று தான் எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியல் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணமே அந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து தான். இவருக்காகவே இந்த சீரியலை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி பார்த்தனர் . ஆனால் கடந்த வாரம் ,
திடீரென மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் நடிகர் மாரிமுத்து . இவருடைய திடீர் இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை . இதனால் அடுத்த குணசேகரனாக பிரபல வில்லன் நடிகர் வேல ராமமூர்த்தியை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆனால் நடிகர் வேல ராமமூர்த்தி சீரியலில் நடித்த அனுபவம் இல்லை என்றும் , பல படங்களில் தற்போது ஒப்பந்தம் ஆகிவிட்டேன் என்றும் டிமிக்கி கொடுத்து வருகிறாராம் . இப்படியே போனால் சீரியல் நின்று விடும் என்று அடுத்த ஆதி குணசேகரனாக இந்த நடிகரை போடலாம் என்று,
எதிர்நீச்சல் குழு முடிவு எடுத்துள்ளதாம். அவர்கள் வேறுயாருமில்லை நடிகர் ராதாரவி அல்லது நடிகர் பசுபதி தான் . இவர்களில் யாரையாவது ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . இதில் நடிகர் ராதாரவி ஆதி குணசேகரன்,
கதாபத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனால் விரைவில் இந்த சீரியலில் யார் நடிக்க போகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது…