தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கலக்கி கொண்டு வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். குறிப்பாக தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு நல்ல பெயர் இருந்து வந்தது . ஆனால் அதெல்லாம் தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது . அந்த வகையில் சிவகார்த்திகேயனின் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருந்தவர் இசையமைப்பாளர் டி இமான் .இதனால் இவர்கள் இருவருக்கும்,
இடையே அண்ணன், தம்பி போல ஒரு உறவு இருந்து வந்தது . இப்படி இருக்கும் நிலையில் டி. இமானின் விவாகரத்துக்கு முக்கிய காரணமே சிவகார்த்திகேயன் தான் என்றும், அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்றும் குண்டை தூக்கிப்போட்டிருக்கிறார் டி இமான்.
அதோடு சிவகார்த்திகேயனுக்கும் , டி இ மானின் முதல் மனைவிக்கும் தொடர்பு இருந்ததாகவும் சர்ச்சைகள் கிளம்பியது . ஆனால் இதெல்லாம் முற்றிலும் பொய் என்று கூறியிருந்தார் டி இமானின் முதல் மனைவி . இப்படி இருக்கும் நிலையில் இந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில்,
அடுத்த சர்ச்சை தொடங்கியுள்ளது . அதாவது தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தின் போது இவருக்கும் சிவக்கார்த்திகேயனுக்கும் இடையே கிசுகிசுக்கள் எழுந்ததாம் . இதன் பிறகு தான் சிவகார்த்திகேயனும்,
தனுஷும் பேசிக்கொள்வதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது . ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை . இருந்தாலும் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனின் பெயர் அடிபட்டு வருவது அவருடைய கேரியரையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது…