தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேலாக கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த சூப்பர் ஸ்டாருக்கு சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . இதைத்தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .
மேலும் தமிழ் சினிமா உலகில் இத்தனை வருடமாக இருந்தாலும் யாருக்கும் பயப்படாமல் இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . ஆனால் இந்த நடிகை என்றால் மட்டும் கொஞ்சம் பயப்படுவாராம். அவர் வேறு யாருமில்லை நடிகை ராதிகா தான் . அந்த வகையில் ,
ரஜினியும் ராதிகாவும் இணைந்து நல்லவனுக்கு நல்லவன் ,மூன்று முகம், ஊர் காவலன் ,ரங்கா போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இப்படி இருக்கும்போது ராதிகா ஒரு முறை ரஜினியை சந்திக்கும் போது காலில் ரப்பர் செருப்பு அணிந்து இருந்தாராம்.
உடனே ராதிகா சூப்பர் ஸ்டாரா இருந்துகிட்டு காலில் ரப்பர் செருப்பா என்று கேட்டிருக்கிறார் . அப்போதிலிருந்து நடிகை ராதிகாவை பார்த்தால் உடனே பயந்துபோய் அவருடைய காலில் என்ன செருப்பு அணிந்து இருக்கிறோம் என்று பார்ப்பாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ராதிகாவே பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …