பொதுவாகவே சினிமாவை பொறுத்தவரை ஒரு சில நடிகைகள் திருமண வயதை கடந்துதான் கல்யாணமே செய்து கொள்வார்கள். ஆனால் 53 வயதாகியும் இன்னும் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறாராம் பிரபல நடிகை ஒருவர். அவர் வேறு யாருமில்லை நடிகை ஷோபனா தான் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகை ஷோபனா ,
கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான எனக்கு ஒருவன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மருதாணி ,காதல் கீதம் ,இது நம்ம ஆளு ,பாட்டுக்கு ஒரு தலைவன் ,பொன்மன செல்வன், வாத்தியார் வீட்டு பிள்ளை,
சத்ய வாக்கு , தளபதி , துறைமுகம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஷோபனா . மேலும் இவர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் கிட்டத்தட்ட 230 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ,
என்பது குறிப்பிடத்தக்கது . அதோடு பரதநாட்டியத்தில் அதிகம் ஆர்வம் கொண்ட நடிகை ஷோபனா 53 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சில வருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை தத்தெடுத்து,
வளர்த்தி வருகிறார் நடிகை ஷோபனா . அப்படி இருந்தும் ஷோபனாவுக்காக அவருடைய குடும்பத்தினர் இப்போதும் மாப்பிள்ளை தேடி வருவதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதை விட்டா இனி 60 ம் கல்யாணம் தான் என்று கூறிவருகின்றனர் …